தமிழகத்தில் சாதி தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இறந்தவரின் உடலை சுமந்த வந்த உறவினர்கள், பாடையில் கயிறு கட்டி பாலத்தின் மீது இருந்த கீழே இறக்குகின்றனர். கீழே இருக்கும் நபர்கள் பாடையை பிடித்து சுமந்து செல்கின்றனர்.
இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின் படி, வேலூரில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இறந்த நபர் தலித்து என தெரியவந்துள்ளது. இந்நிலையில், மயானத்திற்குள் நுழையும் வழி சில உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் பண்ணை நிலம் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
Shocking, painful and disheartening..
Vellore – Body lowered by ropes from a bridge after access to graveyard denied to Dalits..
Entry points were encroached by Caste Hindus who refused to give way through a farm land for a dead body.. pic.twitter.com/Kw0EmEUJHg
— Pramod Madhav (@madhavpramod1) August 22, 2019