cinema

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

[ad_1]

சென்னை: அயோத்தியில் நாளை (ஜனவரி 22) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அயோத்தி சென்றார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்டம் ராம கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஜன. 22) நடக்கிறது. மதியம் 12.20 மணிக்கு கோவிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது. இதில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் அயோத்தி – ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர நிர்வாகிகள் அவருக்கு அளித்தனர்.

இந்நிலையில் இன்று (ஜன. 21) நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார். முன்னதாக காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இது 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பிரச்னை.இதற்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டது.தற்போது நிறைவேறியுள்ளது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.இவ்வாறு அவர் கூறினார்.நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *