health

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும்? ஆராய்ச்சியும் ஆயுர்வேதமும் சொல்வது உண்மை! – NewsTamila.com

[ad_1]

தினமும் காலையில் பல் துலக்கிய பிறகு என்ன செய்வீர்கள்? இந்த கேள்விக்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பதில்கள் உள்ளன. சிலர் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பார்கள், சிலர் காபி மட்டுமே அன்றைக்கு ஒரே வழி என்று கூறுகிறார்கள், மற்றவர்கள் காலை உணவை நேராக சாப்பிடுகிறார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்க ஏதாவது செய்ய வேண்டுமென்றால், காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, பாலில் தேன் கலந்து அருந்துவது, அருகம்புல் சாறு, வாழைப்பழச்சாறு மற்றும் பல வீட்டு வைத்தியங்கள். ஏனெனில் வெறும் வயிற்றில் நாம் உண்ணும் எந்த உணவும் நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பெரும்பாலான நேரங்களில் யாரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காரமான உணவைச் சாப்பிடுவதில்லை, மேலும் நெய் சாப்பிடுவதைப் பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. ஆனால் பல சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளும் நமது ஆயுர்வேதமும் நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் சொல்கிறது. அதாவது காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு ஒரு கிளாஸ் வெந்நீரைக் குடிக்கவும். இதை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு வேறு எந்த உணவையும் சாப்பிடுங்கள். முதலில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

செல் செயல்பாடு அதிகரிக்கிறது:

நமது ஆயுர்வேதத்தின்படி, நெய்யில் உள்ள ‘ரசம்’ உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது. எனவே காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் புத்துணர்ச்சி பெற்று செல்களைப் பராமரித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறோம்.

தோல் பொலிவு:

செல்கள் அழியும் போது, ​​நமது சருமம் மந்தமாகி, சுருங்கி விடும். நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துணர்ச்சி அடைவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பும் கிடைக்கும். நெய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

மூட்டு வலி மற்றும் வாத நோயிலிருந்து காப்பாற்றுகிறது:

நெய் ஒரு இயற்கையான மசகு எண்ணெய், எனவே முழங்கால் போன்ற எலும்பு மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள் வறண்டு போகாமல் அவற்றை மிருதுவாக வைத்திருக்கும். இது மூட்டு வலி அல்லது வாத நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

மூளை செல்களைத் தூண்டுகிறது:

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் மூளையில் உள்ள செல்கள் தூண்டப்பட்டு மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மூளை வேகமாகச் செயல்படுவதால், நரம்பு மண்டலம் புத்துணர்ச்சியடைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளையை பாதிக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

எடை குறைக்க:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5-10 மில்லி அளவு நெய்யை உட்கொண்டால் உடல் எடை குறையும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கு மாறாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்கிறது.

முடி உதிர்வை தடுக்கும்:

தினமும் காலையில் எழுந்தவுடன் நெய்யை உட்கொள்வது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடியை மிருதுவாகவும் நீளமாகவும் ஆக்குகிறது மற்றும் வேர்களை பலப்படுத்துகிறது. இது முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதை வெறுப்பவர்கள் கூட பயமின்றி நெய்யை உட்கொள்ளலாம். நீங்கள் பால் பொருட்களிலிருந்து வாந்தி எடுக்கும் வகையாக இருந்தால், கவலைப்பட வேண்டாம், ‘லாக்டோ-டாலரன்ஸ்’ உள்ளவர்கள் கூட நெய்யை சாப்பிடலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது நமது உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

செய்தி உடனடி… வாட்ஸ்அப் சேனலில் ‘தினமணி’யை பின்தொடரவும்…



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *