cinema

“அப்பா எனக்காக அழுதிருக்கிறார்” – ‘ப்ளூ ஸ்டார்’ வெற்றி விழாவில் சாந்தனு உருக்கம்

[ad_1]

சென்னை: “என் வெற்றிக்காக அப்பா அழுதார் என்று அம்மா கூறியுள்ளார். ‘புளூ ஸ்டார்’ படத்தின் மூலம் கண்ணீரை வரவழைக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சாந்தனு, “எனது ஒவ்வொரு படத்தின் மேடையிலும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று என் வாழ்க்கையில் அப்படி ஒரு தருணம் இருக்கிறது.

என்னால் இதை நம்ப முடியவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக உணர்கிறேன். இந்த வெற்றியை எனக்கு வழங்கியதற்கு நன்றி. என் வாழ்க்கையில் இது போன்ற நேர்மறையான விமர்சனத்தை ஒருபோதும் பெற்றதில்லை. ‘சக்கரக்கட்டி’ படம் வெளியாகி 15 வருடங்கள், 5,600 நாட்கள் ஆகியும் வெற்றியை அடைந்துள்ளேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெற்றி என் பெற்றோருக்கு வெற்றியின் மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் அப்பாவும் அம்மாவும் என்னை விட வெற்றிக்காக 100 மடங்கு பசியுடன் இருந்தனர்.

15 வருடங்களாக எனக்கும் அப்பாவுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. என் தந்தை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். “நான் பலரை அறிமுகப்படுத்தி வெற்றியடையச் செய்திருக்கிறேன். ஆனால், என் பையனுக்கு என்னால் வெற்றியைக் கொடுக்க முடியவில்லை’ என்று என் தந்தை கண்ணீர் விட்டார். அன்று நினைத்தேன். அந்த கண்ணீரை துடைக்க எனக்கு ஒரு வெற்றி போதும், இன்று ‘புளூ ஸ்டார்’ மூலம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த நன்றியை என்னால் மறக்கவே முடியாது” என்று உருக்கமாக கூறினார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *