cinema

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம்

[ad_1]

திருப்பூர்: நடிகர் யோகிபாபு தனது குடும்பத்தினருடன் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

கடந்த 2ம் தேதி அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. இதனால், தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் சிவாச்சாரியார்களிடம் கோயிலின் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.

நடிகர் யோகி பாபு தனது 5வது திருமண நாளையொட்டி அவிநாசியப்பனை குடும்பத்தினருடன் தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி ஏற்கனவே கோவில் பற்றி பலமுறை கூறியிருப்பதால், குடும்பத்துடன் தரிசனம் செய்ய விரும்புவதாக கூறினார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள், நடிகர் யோகி பாபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *