cinema

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டார் – NewsTamila.com

[ad_1]

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டார்

19 செப், 2023 – 07:27 IST

எழுத்துரு அளவு:


இசையமைப்பாளர்-விஜய்-ஆண்டனிஸ்-மகள்-தற்கொலை

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் மாறியுள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூங்கச் சென்ற அவர் அதிகாலை 3 மணியளவில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை வீட்டு ஊழியர்கள் உதவியுடன் கீழே இறக்கி காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீராவின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மகளின் இந்த தற்கொலை சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *