cinema

சாய் பல்லவியின் தண்டல் நிறைவு | Sai Pallavi thandel movie shooting Completed

[ad_1]

சாய் பல்லவியின் ‘தண்டல்’ படம் முடிந்தது

08 பிப்ரவரி, 2024 – 14:01 IST

எழுத்துரு அளவு:


சாய்-பல்லவி-தாண்டேல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள “தண்டல்”. ஆந்திராவில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மீனவர் தலைவராக நாக சைதன்யாவும், மீனவர் பெண்ணாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. இதற்காக நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் அந்த கிராமத்தில் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக்கொண்டனர்.

ஆக்‌ஷன் படங்களில் நடித்து தோல்வியைச் சந்தித்து வரும் நாக சைதன்யா, இந்தப் படத்துக்காக நீண்ட கால்ஷீட் கொடுத்து, தனக்கு திருப்புமுனையைத் தரும் படத்துக்காக கடுமையாகப் பயிற்சி எடுத்துள்ளார். மீனவப் பெண்ணாக நடிக்கவும் சாய் பல்லவி பயிற்சி பெற்றார். சாய் பல்லவிக்கு தெலுங்கு பேசத் தெரிந்தாலும், கடலோர மீனவப் பெண்களின் தெலுங்கு ஸ்லாங்கைக் கற்றுக்கொண்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்கிறார். அல்லு அர்ஜுன் வெளியிட்டார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *