cinema

டெல்லி போலீஸுக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி

[ad_1]

செய்தி பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2024 09:28 AM

வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2024 09:28 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 ஜனவரி 2024 09:28 AM

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தில் வேறொரு பெண்ணின் உடலுடன் பொருத்தி வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை ராஷ்மிகாவும் தனது வேதனையை பதிவிட்டுள்ளார். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வீடியோவை தயாரித்த முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த இமானி நவீனை (24) போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போலி வீடியோவை வெளியிட்டவரை கைது செய்த டெல்லி காவல்துறைக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” கைது செய்த டெல்லி காவல்துறைக்கு நன்றி. உங்கள் அனுமதியின்றி உங்கள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மார்பிங் செய்யப்பட்டாலோ அது தவறு! உங்களைச் சுற்றிலும் ஆதரவான சமூகம் இருப்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டும். போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

எங்களை பின்தொடரவும்

தவறவிடாதீர்கள்!




[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *