cinema

பூனம் பாண்டே மீது வழக்கு பதிய கோரிக்கை

[ad_1]

செய்தி பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி, 2024 01:05 PM

வெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2024 01:05 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2024 01:05 PM

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் காலமானதாக அவரது மேலாளர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொய்யான செய்திகளை பரப்பியதாகவும் கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்தனர். அவரது செயலுக்கு திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ‘பூனம் பாண்டேயின் செயல் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றும், அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.சி., சத்யஜீத் தம்பேவும் இதை வலியுறுத்தியுள்ளார். விளம்பரத்துக்காக இப்படி நடந்துகொள்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதேபோல் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எங்களை பின்தொடரவும்

தவறவிடாதீர்கள்!




[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *