மலர் தொடரிலிருந்து வெளியேறிய ஹீரோ | The hero who left the Malar series
[ad_1]
மலர் தொடரில் இருந்து வெளியேறிய ஹீரோ
12 ஜனவரி, 2024 – 13:04 IST

மலர் என்பது தனியார் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர். இதில் அக்னி ஹீரோவாகவும், ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இருவருக்கும் இடையேயான நகைச்சுவையும், கெமிஸ்ட்ரியும் க்யூட்டாக அமைந்து, ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது மலர் சீரியல் 250 எபிசோட்களை கடந்துள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சீரியலில் இருந்து ஹீரோவாக நடித்து வரும் அக்னி விலகியுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டது. இந்த காயம் ஆற நீண்ட நாள் ஆகும் என்பதால், சீரியலில் இருந்து இடையூறு இல்லாமல் வெளியேறுகிறேன். இது ஒரு கூட்டு முடிவு. ஆதரவு அளித்த அனைத்து அன்பு நண்பர்களுக்கும் நன்றி. எனக்கு பதிலாக அர்ஜுனாக நடிக்கும் நடிகருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
[ad_2]