cinema

மீண்டும் இணையும் ஃபஹத் பாசில் – வடிவேலு கூட்டணி!

[ad_1]

சென்னை: ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சுதிஷ் ஷங்கர் இயக்கும் இப்படம் ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 98வது படமாகும். கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கிய இவர், 2014ல் மலையாளத்தில் திலீப் நடித்த ‘வில்லி வீரன்’ படத்தை இயக்கினார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. கலைசெல்வன் சிவாஜி கையாளும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *