யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்; ரசிகர்கள் காயம்
[ad_1]
இலங்கை யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர விழா நேற்று நடந்தது. நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலா மாஸ்டர், தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சிவா, கேபிஒய் பாலா, பிரேமா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திறந்தவெளி நிகழ்ச்சியில், முன்பகுதியில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தியவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இலவசமாகப் பார்ப்பதற்காக பின்புறம் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தடையை மீறி மேடைக்கு அருகில் முன்னேறியதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.
போலீஸ் அதிகாரிகள், நடிகை ரம்பா உள்ளிட்டோர் ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
[ad_2]