cinema

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி சிறப்பு யாகத்தில் கங்கனா ரனாவத் பங்கேற்பு

[ad_1]

அயோத்தி: நாளை (ஜன. 22) ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி சென்ற நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஜன. 22) நடைபெறுகிறது. மதியம் 12.20 மணிக்கு கோவிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது. இதில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜன.21) காலை தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். நடிகர் தனுஷ் லக்னோவில் இருந்து அயோத்தி சென்றுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்று காலை அயோத்தி சென்றடைந்தார். ராம கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று நடைபெற்ற சிறப்பு யாகத்தில் அவர் பங்கேற்றார். சுவாமி ராமபத்ராச்சார்யாவை சந்தித்தது குறித்து கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மரியாதைக்குரிய ஸ்ரீ ராமபத்ராச்சார்யா ஜியை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது. அவர் நடத்திய அனுமன் சிறப்பு யாகத்தில் பங்கேற்றேன். புண்ணிய நகரமான அயோத்தியில் எங்கும் ஸ்ரீராமரின் வரவேற்பு. நாளை, அயோத்தி மன்னர்கள் நீண்ட வனவாசம் முடிந்து தாயகம் திரும்புவார்கள்” என்று பதிவில் கங்கனா கூறியுள்ளார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *