லைகா – விஷால் இடையிலான பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு
[ad_1]
சென்னை: லைகா பிலிம்ஸ் மற்றும் நடிகர் விஷால் இடையேயான நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணாவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனை லைகா புரொடக்ஷன்ஸ் ஏற்றுச் செலுத்தியது. 2021 ஆம் ஆண்டு, லைகா நிறுவனம், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாத நடிகர் விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால், 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனைகளை விசாரிக்க ஆடிட்டரை நியமிக்க வேண்டும் என்ற விஷாலின் கோரிக்கையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு கோரிக்கையை ஏற்று, நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணாவை நீதிபதி நியமித்தார். அவருக்கு இருதரப்பு, 3 ஆண்டுகள் வருமான வரி இதுவரை கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
மேலும், உரிய விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[ad_2]