cinema

“ஷாருக், சல்மான், ஆமிர்கானுக்குப் பிறகு…” – கரண் ஜோஹரின் ‘சூப்பர் ஸ்டார்’ கணிப்பு

[ad_1]

மும்பை: ஷாருக், சல்மான், அமீர் என மூன்று கான்களுக்குப் பிறகு பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்ற கான்செப்ட் காணாமல் போகலாம் என இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகிய மூன்று கான்களுக்குப் பிறகு வரும் தலைமுறையில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கருத்து மறைந்து போகலாம். என்னைப் பொறுத்தவரை, இந்த மூன்று கான்களுக்குப் பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற வார்த்தையே இருக்காது. ஒரு கட்டம் வரை பிரபலங்கள் என்று அறியப்பட்டவர்கள் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்.

ஆனால் இன்று இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள், உணவு வோல்கர்கள் மற்றும் ஃபேஷன் செல்வாக்கு செலுத்துபவர்கள் பிரபலங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஷாருக், சல்மான், அமீர், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கரீனா கபூர், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோருக்கு நாடு முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இன்றைய தலைமுறையில் அப்படி ஒரு ரசிகர் மனோபாவத்தை உருவாக்குவது மிகவும் கடினம்”.

மேலும், ஷாருக்கான் பற்றி பேசுகையில், “ஷாரு கான் இதைவிட புத்திசாலித்தனமான, வசீகரமான ஆளுமை கொண்ட யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அந்த கம்பீரமான ஈர்ப்பு அவருக்கு மட்டுமே உண்டு. அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எதிர்காலத்தில் மேலும் பல நடிகர்கள் வரலாம். ஆனால் அவர்களால் ஷாருக்கானின் இடத்தைப் பிடிக்க முடியாது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *