Sports

“உலக கோப்பை அணியில் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார்” – ராகுல் டிராவிட் – Newstamila.com

[ad_1]

மொஹாலி: வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் டிராவிட் இவ்வாறு கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. தொடரை இந்தியா நடத்தும். இந்தியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *