Sports

ரிஸ்வான் எதிர்ப்பு ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் எதிரொலித்தது: ‘# மன்னிக்கவும்_பாகிஸ்தான்’ எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்

[ad_1]

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ரிஸ்வான் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதால் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். சில இந்திய ரசிகர்கள் அவருக்கு எதிராக ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதைத் தொடர்ந்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்றைய சம்பவம் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக்குடன் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக 1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியின் வீடியோவை இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ளார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *